"கிரிக்கெட் வாரியத்தை அவமானப்படுத்தி விட்டார் பிந்த்ரா
டெல்லி:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஒழுங்கு நடவடிக்கைக் குழு,பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பிந்த்ரா கிரிக்கெட் வாரியத்தைஅவமானப்படுத்தும் விதமாக கருத்துத் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்தும், மேட்ச் பிக்ஸிங் தொடர்பாகவாரியத்தைக் குறை கூறியும் பிந்த்ரா கருத்துத் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் மீதுநடவடிக்கை எடுப்பதற்காக வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூடியது.
திங்கள் கிழமை கூடிய வாரியக் கூட்டத்தில், ஒழுங்கு நடவடிக்கைக் குழுகண்டுபிடிப்புகளை அடுத்த மாதம் 23-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும்பொதுக்குழு கூட்டத்தின் போது சமர்ப்பிப்பது என முடிவு எடுத்தது.
பொதுக்குழு பிந்த்ராவின் மீதும், பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் மீதும் நடவடிக்கைஎடுப்பதற்கு முன் கிரிக்கெட் வாரியத்தின் கண்டுபிடிப்புகள் குறித்து ஆராயும். நடவடிக்கைஎடுப்பதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு.
கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில்,வாரியத்தலைவர் ஏ.சி. முத்தையா தலைமையில் நார்ஹாரி அமின் மற்றும் ராம் பிரசாத்ஆகியோர் கொண்ட 3 பேர் குழு பிந்த்ரா மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவுசெய்யும்.
பிந்த்ராவின் கருத்துக்கள் கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தையும், கிரிக்கெட்டையும் இழிவுபடுத்தியுள்ளது என்றார்.
திங்கள்கிழமை நடந்த கூட்த்தில் பிந்த்ரா பங்கேற்கவில்லை. பஞ்சாப் கிரிக்கெட் சங்கம்சார்பில் மொகீந்தர் பான்டாவ் பங்கேற்றார்.