போலி ஐ.எஸ்.ஆர்.ஓ.ஊழியர் கைதுது
அகமதாபாத்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் மூத்த விஞ்ஞானி என்று கூறியவரை அகமதாபாத் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்துப் போலீஸார் கூறியதாவது:
புனித் சாஸ்திரி என்பவர், தான் இந்திய விஞ்ஞானக் கழகத்தில் வேலை செய்வதாகக் கூறிக்கொண்டு அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறினார்.அவர் தானே தயாரித்த போலி அடையாள அட்டையையும் அவர்களிடம் காட்டினார்.
பின்னர் அவர், மாநகராட்சி அதிகாரிகளிடம் தான் ஒரு அறிவியல் வெப் தளம் உருவாக்கப் போவதாகவும், அதற்கு ரூ 25 லட்சம் பணம் வழங்கும்படியும்கேட்டுக் கொண்டார்.
மேலும் தான் உருவாக்கும் அறிவியல் தொடர்பான வெப் தளத்தை பிரதமர் வாஜ்பாய் தொடங்கி வைக்கப் போவதாகவும் தெரிவித்தார். தான்இஸ்ரோவில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக் குழுத் தலைவர் என்றும் கூறினார்.
ஆனால் அவரது பேச்சில், திருப்தியடையாத மாநகராட்சி அதிகாரிகள் அவர் குறித்து இஸ்ரோ மற்றும் பல இடங்களில் விசாரித்த போது அவர் பொய்கூறியது தெரிய வந்தது.
இதையடுத்து மாநகராட்சியை ஏமாற்ற முயன்றது தொடர்பாக நாங்கள் அவரைக் கைது செய்தோம் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications