கங்கை ஆற்றில் மூழ்கி 13 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
முன்கர் (பிகார்):
பிகார் மாநிலம் முன்கர் பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் 13 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் நரேன் குப்தா கூறுகையில், கங்கை ஆற்றில் 23 பேரை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது படகு எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்தது.
படகில் பயணம் செய்து கொண்டிருந்த 13 பேர் ஆற்றில் விழுந்து பலியானார்கள். படகில் பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள் என்று தெரிய வந்துள்ளது. படகில் பயணம் செய்த 10 பேர் லேசான காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications