ஜெ.வுடன் சந்திப்பு... இளங்கோவன் விளக்கம்
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பிற்குப்பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டதை அடுத்து தோழமை கட்சித்தலைவர்களை சந்தித்து வருகிறேன்.
கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து கட்சி மேலிடத் தலைவர் பிரணவ முகர்ஜி மூலம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. கட்சித் தலைமையின்முடிவையே ஏற்றுக்கொள்வோம்.
ஜெயலலிதாவுடன் மோதல் ஏற்பட்டது. கடந்த காலங்களில் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தாலும் அது இரு கட்சிகளின் உறவைபாதிக்காது.
மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் எனத் தான் விரும்புவதாகவும் எனவே மதச்சார்பற்ற அணியில் உள்ள மூப்பனாரும் தங்கள்கூட்டணியில் சேருவார் என நம்புவகிறேன்.
கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இறுதியான பின் சோனியா காந்தி - ஜெயலலிதா சேர்ந்து தேர்தல் பிரசாரம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்.மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கு, பொருளாதார சீரழிவு, விவசாயிகளின் பிரச்னைகள் ஆகியவற்றை முன்வைத்து பிரசாரம்செய்யப்படும் என்றார்.