மிசா பாண்டியன் ஒப்புதல் வாக்குமுலம்
மதுரை:
மதுரை துணை மேயர் மிசா பாண்டியன் நிதி நிறுவன அதிபர் ஜெகதீசனை கொலையில் தனக்குள்ள தொடர்பை ஒப்புக் கொண்டுள்ளார்.
மதுரையில் நிதி நிறுவன அதிபர் ஜெகதீசன் கொலை செய்யபட்டது தொடர்பாக மதுரை துணை மேயர் மிசா பாண்டியன் கைது செய்யபட்டார் .அவரை திமன்றஅனுமதியுடன் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது:
என் அக்கா மகளை நான் திருமணம் செய்து கொண்டேன். என் அக்காவின் மகன் பாண்டிவேல் ராஜனும் எங்கள் தெருவில் வசித்து வரும் அய்யாசாமியின் மகன்ஜெகதீசனும் மேலும் 12 பேரும் இணைந்து 3 வருடங்களுக்கு முன் நிதிநிறுவனம் தொடங்கினர்.
ஜப்பான் மனோகரன் என்பவருக்காக ராஜா ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கிக் கொடுத்தார். கடன் பணத்தை மனோகரன் கட்டாதகாரணத்தால் ஜாமீன் கையெழுத்து போட்ட ராஜாவை கடனை அடைக்குமாறு ஜெகதீசன் தொந்தரவு செய்து வந்தார்.
அடிக்கடி ராஜாவிடம் ஜெகதீசன் தகராறு செய்ததால் ஜெகதீசனை நான் கண்டித்தேன். துணை மேயரான என்னை மதிக்காமல் அசிங்கமாகபேசிவிட்டதால் ஜெகதீசனை தீர்த்துக் கட்டுமாறு கூறினேன்.
அரிவாள் பாண்டியனையும், வரிச்சூர் செல்வத்தையும் எனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டேன். நான் கூறி பல நாட்கள் கழித்தும் ஜெகதீசனை அவர்கள்கொலை செய்யவில்லை. அதனால் நான் அரிவாள் பாண்டியனை கடிந்து கொண்டேன். அவர்கள் ஜெகதீசனை கொன்றனர் என தெரிவித்துள்ளார்.