அரசு மருத்துவமனைகளுக்கு உலக வங்கி உதவி
சென்னை:
தமிழகத்தில் இருக்கும் மாவட்ட தாலுகாக்களில் உள்ள மருத்துவமனைகள் உலக வங்கியின் நிதி உதவி கிடைத்தவுடன் 24 மணி நேர மருத்துவமனைகளாகமாறும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சட்டசபையில் தெரிவித்தார்.
இது குறித்து வியாழக்கிழமை சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் கேட்ட துணைகேள்விக்கு அமைச்சர்பதிலளித்த போது கூறியதாவது:
தமிழகம் முழுவதிலும் 200 தொடக்க சுகாதாரத்துறை மருத்துவமனைகள் இருக்கின்றன. இந்த மருத்துவமனைகளை 24 மணி நேர மருத்துமனையாகமாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கேட்டு வருகின்றனர்.
இந்த மருத்துவமனைகளை 24 மணி நேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்றால் பல அடிப்படை வசதிகள் வேண்டும். மேலும் மருத்துவர்கள்,நர்ஸ்கள், தொழில் நுட்பபணியாளர்கள் தேவை.
இதற்கு வேண்டிய அளவு நிதி வசதி இல்லாத காரணத்தால் இதை சென்ற ஆண்டு செயல்படுத்த முடியவில்லை. உலக வங்கியிடம் ரூ 650 கோடி நிதி உதவிகேட்டிருக்கிறோம். மத்திய அரசும் உலக வங்கியிடம் பரிந்துறை செய்துள்ளது. நிதி உதவி கிடைத்தவுடன் இந்த மருத்துவமனைகள் 24 மணிநேரமருத்துவமனையாக மாற்றப்படும் என கூறினார்.












Click it and Unblock the Notifications