பெங்களூரிலும் நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

குஜராத்தை உலுக்கிய பூகம்பம் திங்கள்கிழமை கர்நாடகத் தலைநகர் பெங்களூரையும் தாக்கியது.

பெங்களூர் தவிர மும்பை நகரத்தையும் பூகம்பம் தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்தபூகம்பத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

பெங்களூர் நகரின் பல பகுதிகளில் காலை 8.05 முதல் 8.15 மணி வரை லேசான நில நடுக்கம் இருந்தது.இதையடுத்து நில நடுக்கத்தை உணர்ந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். வீட்டுஜன்னல்கள், கண்ணாடிகள் ஆடியதாக அவர்கள் தெரிவித்தனர். 30 விநாடிகளுக்கு இவை ஆடியதாக அவர்கள்தெரிவித்தனர்.

இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் கூறுகையில், மும்பையிலுள்ள பாபா அணு ஆராய்ச்சிமையத்தில், பெங்களூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 4.3 ரிக்டர் என்றஅளவில் இருந்தது.

பெங்களூரின் தெற்கே இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இருப்பினும் இந்த நில நடுக்கத்தால் எந்தப்பாதிப்பும் ஏற்படாது என்றனர்.

பெங்களூரின் விஜயநகர், ஜெயநகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் பெரிய அளவில் இல்லையென்றாலும் கூட, கர்நாடக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+