விலங்கை நினைத்து விவசாயியை சுட்டவர்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தூங்கிக் கொண்டிருந்த விவசாயியை, ஏதோ விலங்கு படுத்துள்ளது என நினைத்து ஒருவர் சுட்டதில் அந்த விவசாயிஉயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டம் அஞ்செட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தனது வயலில், ஞாயிற்றுக்கிழமைபடுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்து என்பவர், கணேசனைப் பார்த்துள்ளார்.பார்ப்பதற்கு ஏதோ விலங்கு போல அவருக்குத் தோன்றியுள்ளது.
இதையடுத்து, பயத்தில் அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் கணேசனை நோக்கிச் சுட்டுள்ளார். இதில்கணேசன் அங்கேயே இறந்தார்.
இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து முத்து கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த துப்பாக்கிபறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications