செந்நாயைப் பார்த்து பதுங்கும் அதிரடிப்படை வீரர்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை:

வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படை வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல்வேட்டையின்போது குறுக்கிடும், யானை, செந்நாய், பன்றி ஆகியவற்றைக் கண்டு பதுங்கி வருகின்றனர்.

வீரப்பனைத் தேடும் பணியில் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அதிரடிப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை அருகே உள்ள சிறுவாணி மலைப் பகுதி, ஆலாந்துறை, இருட்டுப் பள்ளம் ஆகிய இடங்களில் இந்ததேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

தேடுதல் வேட்டையின்போது, வீரப்பனுக்கு உதவியதாக 7 பேர் கொண்ட கும்பலைக் கண்டு பிடித்தனர்.இதையடுத்து அங்கு முகாமிட்டு தேடுதல் வேட்டையைத் தொடர்ந்துள்ளனர்.

தேடுதல் வேட்டையில் ஈடுபடும் வீரர்களுக்கு உணவு சமைக்க உணவுக் கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இதனை யானைகள் முற்றுகையிட்டு சேதப்படுத்தின. உணவுக் கூடாரத்தில் அதிரடிப்படையினர் இல்லாததால்,யாரும் பாதிக்கப்படவில்லை. உணவுப் பொருள்கள் மட்டும் சேதமடைந்தன.

இதே போல், யானைகள், செந்நாய், பன்றி உட்பட வன விலங்குகளை வேட்டையாடக் கூடாது எனஅதிரடிப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உ த்தரவையடுத்து அவர்கள் வன விலங்குகளைக்கண்டால், உடனடியாக பதுங்கி விடுகின்றனர். அவை வேறு இடங்களுக்கு நகர்ந்த பின்னரே அங்கிருந்துசெல்கின்றனர்.

இது தவிர பூச்சிகள் கடிப்பதாலும் பல அதிரடிப்படை வீரர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும்மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+