For Daily Alerts
Just In
பாக்.கிரிக்கெட்.. தொடரும் மோதல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கும் அணியின் பயிற்சாளருக்கும் இடையே பரிசுப் பணம் பங்கிடுவதில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டின் போது அணி வீரர்கள் பெப்சி கம்பெனி லோகோவை வைத்துக் கொள்வதற்காக பயிற்சியாளருக்கு 17 லட்ச ரூபாயும்,வீரர்களுக்கு தலா ஒன்றரை லட்ச ரூபாயும் வழங்கும் ஒப்பந்தத்தை அணியின் வீரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அணியின் பயிற்சியாளரான மியான்தத்தை பல வீரர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தது பற்றி கூறிய முன்னணி வீரர் ஒருவர், பயிற்சியாளருடன் தனிப்பட்ட கருத்துவேறுபாடு இல்லையெனினும், இத்தகைய ஒப்பந்தங்களால் மட்டுமே மோதல் ஏற்படுவதாக தெரிவித்தார்.
Comments
Story first published: Monday, January 29, 2001, 5:30 [IST]