வருகிறார் வாஜ்பாய்
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த இடங்களைப் பிரதமர் வாஜ்பாய் திங்கள்கிழமை பார்வையிடுகிறார்.
திங்கள்கிழமை பிற்பகல் வாஜ்பாய் விமானம் மூலம் குஜராத் செல்கிறார். அவர் கட்ச் மாவட்டத்திற்குச் சென்று அங்கு மிகப்பெரிய இயற்கைச்சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களை விமானத்திலிருந்து பார்வையிடுகிறார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
இதுகுறித்து குஜராத் மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரதமர் வாஜ்பாயுடன், மத்திய அரசு அதிகாரிகள் சிலரும் குஜராத் வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பின் வாஜ்பாய் பூஜ் டவுனுக்குச் செல்வார். அங்கிருந்து முக்கிய வியாபார ஸ்தலமான அகமதாபாத் செல்வார்.அவர் 3 மணி முதல் 4 மணி வரை விமானத்திலிருந்து பார்வையிடுவார்.
வாஜ்பாய் மத்திய, மாநில உயர் அதிகாரிகளுடன், பூகம்ப பாதிப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் குஜராத் மாநில முதல்வர் கேசுபாய் படேலும் கலந்து கொள்வார். பின்னர் டெல்லி திரும்புமுன் பிரதமர் வாஜ்பாய் நிருபர்களைச் சந்திப்பார்என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.