வீரப்பன் கேரளாவில் இல்லை .. டி.ஜி.பி.
சென்னை:
சந்தன மரக் கடத்தல் வீரப்பன் கேரளா காட்டிற்குள் சென்றுவிட்டது குறித்துத் தெரியாது. அதுபற்றிபத்திரிகைகள்தான் செய்திகள் வெளியிட்டுள்ளன என்று போலீஸ் டி.ஜி.பி. ராஜகோபாலன் நிருபர்களிடம்தெரிவித்தார்.
சென்னையில், வேலூர் போலீஸ் அதிகாரிகள் சிலருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு அவர்பேசுகையில், சந்தன வீரப்பனை பற்றி கேரள போலீசார் தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் அதிரடிப்படை கேரளாவிற்குசெல்வதற்கு தடையேதுமில்லை.
அதிரடிப்படையும், எல்லைப் பாதுகாப்புப் படையும் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருவதால் இம்முறை எப்படியும்வீரப்பனை பிடித்துவிட முடியும். வதந்திகளை நம்பாமல் நம்பகமான தகவல்களின் அடிப்படையிலேயே அவர்கள்செயல்படுவதாகக் கூறினார் ராஜகோபாலன்.
கேரளக் காட்டில் வீரப்பன்?
இதற்கிடையே, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பூயங்குட்டி வனப்பகுதியில் சந்தன மரக்கடத்தல்வீரப்பன் இருப்பதாக வந்த தகவலையடுத்து கேரள வனத்துறையைச் சேர்ந்த ஐந்து கமாண்டோ படைகள்ஆதிவாசிகளின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
வீரப்பன் காணப்பட்டதாகக் கூறப்படும் மலையாத்தூர் வனக்கோட்டத்தைச் சேர்ந்த 15 வனச்சரகங்களும்உஷார்படுத்தப்பட்டுள்ளதாக கேரள வனத்துறை அதிகாரி ஷாகுல் அகமது தெரிவித்தார். 357ச.கீ.மி உள்ளஇவ்வனப்பகுதியில் 10கீ.மி மட்டுமே வாகனங்கள் செல்லமுடியும். மீதிப் பகுதியை நடந்துதான் தேடுதல் வேட்டைநடத்த வேண்டும் என்றார்.
காட்டின் சில பகுதிகளில் கோத்தமங்கலம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மேத்யூ பால் தேடுதல் வேட்டை நடத்தியதாகவும்அவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications