ஐரோப்பிய யூனியன் உதவி
டெல்லி:
குஜராத் பூகம்ப நிவராணப் பணிகளுக்கு 3 மில்லியன் ஈரோ நிதியை நன்கொடையாக வழங்குவதாக ஐரோப்பிய யூனியன் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் அதிகாரி ஒருவர் கூறுகையில், குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் ஐரோப்பிய யூனியனை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் உதவி செய்யத் தயாராக இருக்கிறோம்.
முதல் கட்டமாக 3 மில்லியன் ஈரோ பணத்தை இந்தியாவுக்கு அனுப்பவுள்ளோம். முதலில் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குநிவாரண உதவி அளிக்கப்படும். மேற்கொண்டு உதவி தேவைப்பட்டால் நிதியுதவி அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.
ஐரோப்பிய யூனியன் தலைவர் ரொமோனோ பிரோடி, ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில், ஐரோப்பிய யூனியன் கமிஷன் சார்பில்,குடியரசு தினத்தன்று இந்தியாவில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பலியான மக்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத்தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
இந்தியாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய யூனியன் கமிஷனர் கிறிஸ் பாட்டென், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங்கிடம், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம். மேலும் பூகம்ப நிவாரணத்திற்காகத் தேவைப்படும்அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.