சாவு 1 லட்சமாக உயரும்
சிங்கப்பூர்:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பச்சாவு 1 லட்சத்தைத் தாண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்னான்டஸ் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பி.பி.சி. நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பம் மிகவும்அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவமாகும். இடிபாடுகளுக்கிடையில் பலர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சாவு எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டும் என்று தெரிகிறது. காயமடைந்தவர்களின்எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பூஜ் மாவட்டத்தில் 7.9 என்ற ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. பூஜ் நகரம் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்துவிட்டது. பழமையான நகரான பூஜில் ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என்பதுதான் வருந்தக்கூடிய விஷயம்.
குடியரசு தினத்தன்று பூஜ்ஜில் ஏற்பட்ட நிலநடுக்கம், பல்வேறு தொழில்களுக்கு பெயர் போன குஜராத்மாநிலத்தையே உலுக்கி விட்டது. பல கிராமங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன என்றார் ஜார்ஜ் பெர்னான்டஸ்.












Click it and Unblock the Notifications