குப்பைத் தொட்டியில் கிடந்த "மாணிக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள குப்பைத் தொட்டியில், பிறந்து சிலநாட்களே ஆன குழந்தை அநாதையாக விடப்பட்டது.
திங்கள்கிழமை, பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள், மருத்துவமனைஅருகிலிருந்த குப்பைத் தொட்டியிலிருந்து அழுகுரல் வருவதைக் கேட்டனர்.
இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, குப்பைக் கூளங்களுக்கு மத்தியில் ஒரு அழகான குழந்தை கிடந்ததுதெரிய வந்தது. இதையடுத்து அக்குழந்தையை எடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடம் அவர்கள் ஒப்படைத்தனர்.
தவறான வழியில் அந்தக் குழந்தை பிறந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications