பொருள் அனுப்புகிறது பாக்.
இஸ்லாமாபாத்:
குஜராத்தில் பூகம்பம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு பாகிஸ்தான் விமானம் செவ்வாய்க்கிழமைஇஸ்லாமாபாத்திலிருந்து செல்லும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சதார் தெரிவித்தார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சதார் கூறுகையில், பாகிஸ்தானிலிருந்து விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் செவ்வாய்க்கிழமைகுஜராத் செல்லும்.
குஜராத்தில் ஏற்பட்ட துயரமான சம்பவம் எங்களை மிகவும் துக்கத்திற்குள்ளக்கியது. இதே போல் இனிமேல் நடக்கக் கூடாது. மேலும் தங்களதுஉறவினர்களை இழந்து விட்டு உயிர் பிழைத்துத் தவிக்கும் மக்களை நினைத்தால் மிகவும் கஷ்டமாக உள்ளது என்றார்.
முன்னதாக, ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப் கூறுகையில், குஜராத்துக்கு பாகிஸ்தான் அளிக்கும் நிவாரண உதவியை இந்தியா மறுத்து விடும் என்றுஎதிர்பார்த்தோம். இந்தியா, பாகிஸ்தானின் நிவாரணப் பொருட்களை ஏற்றுக் கொண்டது எங்களை மகிழ வைக்கிறது.
பாகிஸ்தான், அதிக அளவில் கம்பளிகள் மற்றும் நிவாரணப் பொருட்களைக் கொடுத்துள்ளது என்றார் அவர்.
இருப்பினும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலர் ஒருவர் கூறுகையில், முதலில் கம்பளிகள், கூடாரங்கள் அமைப்பதற்கான பொருட்கள்மற்றும் மருந்துப் பொருட்களை வேண்டாம் என்று இந்தியா கூறியது.
மாறாக, மோப்ப நாய்ப்படையும், இடிபாடுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் மக்களைக் கண்டுபிடிக்கத் தேவையான நிபுணர்களையும் அனுப்புமாறு இந்தியாகூறியது. இறுதியில் பாகிஸ்தானின் உதவிகளை ஏற்றுக் கொள்வதாக திங்கள்கிழமை மாலை இந்தியா அறிவித்தது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications