For Quick Alerts
For Daily Alerts
Just In
ராமதாஸ் மகன் தேர்தலில் போட்டியிடுவாரா?
கரூர்:
தனது மகன் அன்புமணி வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என பா.ம.க.நிறுவனத்தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
கரூரில் அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்த அவர், தமிழகத்தில் மூன்றாவது அணிபற்றியும் மற்ற கட்சிகள் செய்யும் விமர்சனம் பற்றியும் கருத்துக் கூற மறுத்துவிட்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூடிப் பேசிய பின் தொகுதிகள்முடிவாகும். புதுவையில் கூட்டணி ஆட்சி அமைந்தால் பா.ம.க.ஆட்சியில் பங்குபெறும். ஆனால் தமிழகத்தில் அவ்வாறு அல்ல.
பிப்ரவரி 3-ம் தேதி திருநெல்வேலியில் பா.ம.க. மகளிர் மாநாடும், சிவகாசியில்பா.ம.க.சார்பில் பொங்கல் விழாவும் நடைபெறுகிறது.
குஜராத் பூகம்ப நிவாரணநிதியாக பா.ம.க. சார்பில் இரண்டு லட்ச ரூபாய்அளிக்கப்படுகிறது என்றார் ராமதாஸ்.
Comments
Story first published: Tuesday, January 30, 2001, 5:30 [IST]