பெண் மீது கை போட்ட இந்திய என்ஜீனியருக்கு சிறை
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் விமானத்தில் பயணித்த பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதற்காக, இந்தியாவைச் சேர்ந்தகம்ப்யூட்டர் என்ஜீனியருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்தவர் ஸ்வரூப் தாஸ் (வயது 27). இவர் சிங்கப்பூரில் கம்ப்யூட்டர் என்ஜீனியராக இருந்துவருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி இவர் அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஒருவிமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
சான்பிரான்ஸிஸ்கோ நகரில் ஒரு பெண் (வயது 32) அந்த விமானத்தில் ஏறினார். ஸ்வரூப் தாஸுக்கு அடுத்தஇருக்கையில் அவர் பயணித்தார். விமானம் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பெண் தூக்கத்தில் ஆழ்ந்தார்.அப்போது ஸ்வரூப் தாஸின் கை அந்தப் பெண்ணின் மீது விழுந்தது.
தூக்கத்தில் ஸ்வரூப் தாஸின் கை தவறுதலாக விழுந்திருக்கலாம் என்று நினைத்த அந்தப் பெண் கையை எடுத்துவிட்டிருக்கிறார். அரை மணி நேரம் கழித்து மீண்டும் அவர் மீது கை விழுந்தது. அப்போதுதான் வேண்டுமென்றேஸ்வரூப்தாஸ் இப்படிச் செய்துள்ளார் என்பதை அவர் உணர்ந்தார்.
இதையடுத்து விமான ஊழியர்களிடம் கூறி அவரும், இன்னொரு பெண் பயணியும், வேறு இருக்கைக்கு மாறிக்கொண்டனர். இதுகுறித்து விமானம் சிங்கப்பூர் வந்ததும் போலீஸில் புகார் கொடுத்தார் அந்தப் பெண்.
ஸ்வரூப் தாஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய சிங்கப்பூர் கோர்ட், ஸ்வரூப் தாஸிற்கு ஒருஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 3 சவுக்கடிகள் கொடுக்க உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications