கடவுளின் கோபம் .. பதவி விலகினார் கர்நாடக அமைச்சர்
பெங்களூர்:
கடவுளின் கோபம் காரணமாகவே குஜராத்த்தில் பூகம்பம் ஏற்பட்டது என்று கருத்துக் கூறிய கர்நாடக அமைச்சர்டி.ஜான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மை மக்களை குஜராத் மக்கள் கொடுமைப்படுத்திய காரணத்தால்தான், அவர்களைபூகம்பம் மூலம் கடவுள் தண்டித்து விட்டார் என்று செவ்வாய்க்கிழமை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தபேட்டியில் ஜான் கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாரதீய ஜனதாக் கட்சி, விஸ்வ இந்து பரிஷத் உள்படபல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஜான் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று கோரின.
பெங்களூரில் பாரதீய ஜனதாக் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமைபெங்களூரில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்த ஜான், தனது பதவியைராஜினாமா செய்வதாக தெரிவித்தார். ராஜினாமாக் கடிதத்தையும் அவர் முதல்வரிடம் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.ஆனால் எனது கருத்து வெளிப்பட்ட நேரம் சரியானதல்ல என்பதை உணர்ந்தேன. எனவேதான் எனதுபதவியிலிருந்து விலகியுள்ளேன் என்றார்.
யு.என்.ஐ.