For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

118 மணி நேர வேதனை

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

அகமதாபாத்தில் இடிந்து விழுந்து கிடந்த மிகப்பெரிய கட்டிடம் ஒன்றின் இடிபாடுகளுக்கிடையில் 18 அடி ஆழமுள்ள படுகுழியில் 118 மணிநேரம் வேதனையுடன்தவித்து வந்த 50 வயது பெண்ணை தீயணைப்புப் படையினர் புதன்கிழமை மீட்டனர்.

குஜராத் பூகம்பத்தில் அகமதாபாத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள பலாடி என்ற இடத்தில் இருந்த சாரதா அபார்ட்மென்ட் இடிந்து விழுந்தது.இதில் 50 வயதான ஜோத்சனா வசந்த குமார் காந்தி என்ற பெண் 118 மணி நேரங்களுக்குப்பின் மீட்கப்பட்டார்.

ஜோத்சனாவின் சகோதரர் தனது சகோதரி, மீட்கப்பட்டது குறித்து பிபின் படேல் என்பவர் கூறுகையில், எனது சகோதரி இடிபாடுகளுக்கிடையில் சிக்கிஉயிரிழந்திருப்பார் என்று நினைத்தேன். அவர் உயிருடன் மீட்கப்படுவார் என்று நம்பவேயில்லை என்றார்.

கட்டிட இடிபாடுகளுக்கிடையிலிருந்து மரண ஓலம் கேட்டுக் கொண்டிருப்பதைக் கேட்ட தீயணைப்புப் படையினர் உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்றுதீவிரமாகத் தேடி ஜோத்சனாவைக் காப்பாற்றினர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X