விசா கட்டுப்பாட்டை தளர்த்தியது இலங்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை அரசு எடுத்துள்ள முக்கிய முடிவின்படி இலங்கைப் பெண்களை மணக்கும் வெளிநாட்டினருக்கும் இனி குடியுரிமை விசா வழங்கப்பட உள்ளது.
இலங்கையில் வாழும் ஆண்கள் வெளிநாட்டுப் பெண்களை மணக்கும் போது மட்டும் அவர்களுக்கு குடியுரிமை விசா வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகைதற்போது இலங்கைப் பெண்களை மணக்கும் ஆண்களுக்கும் வழங்கப்படுவதற்கு இலங்கை அதிபர் அனுமதி அளித்துள்ளார்.
இந்த அனுமதியின் மூலம் இலங்கைப் பெண்களை மணந்த இந்தியா, ஜெர்மனி, கொரியா, சீனா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டதொழிலதிபர்கள் பயனடைவார்கள் என இலங்கைக் குடியுரிமைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இலங்கை குடியுரிமை கிடைக்கும்.( இதற்கு முன் அக்குழந்தைகள் தங்கள் தந்தையின் நாட்டில் மட்டுமேகுடியுரிமை பெற்றனர்)












Click it and Unblock the Notifications