நிவாரண உதவி அதிகரிக்கிறது
துபாய்:
இந்தியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்க உலக நாடுகள் முன்வந்துள்ளன.
ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து ஏற்கனவே அளிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் தவிர தற்போது மீண்டும் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டுவிமானம் ஒன்று இந்தியா வந்து கொண்டிருக்கிறது.
இந்த விமானத்தில் கூடாரம் அமைப்பதற்கான பொருட்கள், கம்பளிகள், துணிமணிகள், மருந்துப் பொருட்கள் ஆகியவை உள்ளன. இவை அடுத்தஇரண்டு நாட்களில் இந்தியா வந்தடையும்.
கனடா: கனடா ஏற்கனவே 3 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளது. இப்போது கனடாவிலிருந்து கூடுதலாக நிதியுதவி வழங்கவுள்ளதாக சர்வதேசஒருங்கிணைப்புத்துறை அமைச்சர் மரியா தெரிவித்தார். இந்த நிவாரணப் பொருட்கள் அடுத்த இரண்டு நாட்களில் இந்தியா வந்தடையும்.
அமெரிக்கா: அமெரிக்காவில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியும், நிவாரணப்பொருட்களும் அளிப்பதாக அறிவித்துள்ளது.
அங்குள்ள மேரிலான்ட், சில்வர் ஸ்பிரிங் ஆகிய ஹோட்டல்கள் நிதியுதவி செய்ய ஒப்புதல் அளித்துள்ளன. அமெரிக்க ஹோட்டல்கள் சங்க தலைவர் சார்லஸ்கூறுகையில், உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம்.
பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை நாங்கள் பங்கு போட்டுக் கொள்ள விரும்புகிறோம். மனித நேய முறையில் நாங்கள் உதவி செய்யத் தயாராகஇருக்கிறோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications