கொள்ளையர்களை சுட உத்தரவு
அகமதாபாத்:
பூகம்பம் பாதித்த பகுதிகளில் கொள்ளையடிக்க யாரும் முயற்சி செய்தால், அவர்களைச் சுடுமாறு போலீஸார் மற்றும் ராணுவ வீரர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில காவல்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கூறுகையில், பூகம்பம் நடந்த இடத்தில் கொள்ளையடிக்க வருபவர்களைத் தடுத்து நிறுத்துமாறுபோலீஸாருக்கும், ராணுவ வீரர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பூகம்பம் நடந்த இடத்தில் கொள்ளையடிக்க வருபவர்களைத் தடுத்து நிறுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கொள்ளையடிக்க முயல்பவர்களை இரும்புக் கரம் கொண்டு தடுத்து நிறுத்துவோம்.
கொள்ளையர்கள் இடிந்து கிடக்கும் வீடுகளில் இருக்கும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்கிறார்கள் என்றுதெரிய வந்துள்ளது. இடிபாடுகளுக்கிடையிலிருந்து மீட்புக் குழுவினர் சடலங்களை மீட்டு வரும் வேளையில், கொள்ளையர்கள் நிவாரண பொருட்களைக் கொடுக்கவருவது போல் வந்து கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள்.
பூகம்பம் ஏற்பட்ட பூஜ் மற்றும் அஞ்சார் நகரங்களில் கொள்ளையடிக்க வருபவர்களைத் தடுக்க ராணுவ வீரர்களும், போலீஸாரும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர் என்றார் ஹரேன் பாண்டியா.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications