பாலசிங்கத்தைச் சந்தித்தது நார்வே தூதுக்குழு
கொழும்பு:
இலங்கைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமரச முயற்சியில் ஈடுபட்டு வரும் நார்வேதூதுக்குழு, லண்டனில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஆன்டன் பாலசிங்கத்தை சந்தித்து பேசியது.
முன்னதாக புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை சந்தித்த தூதுக்குழு போர்நிறுத்தத்தை அறிவித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறியது.
இலங்கை அரசு புலிகள் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொள்ள வேண்டும் எனவும் பேச்சுவார்த்தை முடியும் வரை போர்நிறுத்தம் கிடையாதுஎனவும் தெரிவித்தது.
இதனால் சமரச முயற்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்நிலையில் நார்வே தூதுக்குழு புலிகள் இயக்கத்தின் பாலசிங்கத்தை சந்தித்து வடகிழக்கு மாகாணபிரச்சினை மற்றும் அதனை தீர்ப்பது குறித்து விவாதித்தது.
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு புலிகள் இயக்கத்தின் மற்ற தலைவர்களை இத்தூதுக்குழு சந்தித்து வலியுறுத்தவுள்ளது.
அதன்பிறகு இலங்கை திரும்பி ஆளுங்கட்சித் தலைவர்களையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து புலிகள் மற்றும் அரசுக்கிடையே பேச்சுவார்த்தைநடத்த எடுத்துள்ள முயற்சி குறித்து விவாதிக்கும்.
பின்னர் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைச் சந்தித்து தூதுக்குழு பேச்சுவார்த்தை நடத்தும் என்று தூதுக்குழுவின் தலைவர் எரிக் சோல்ஹீம்தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications