ஸ்பிக் ஊழல் .. வழக்கு 28-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான ஸ்பிக் ஊழல் வழக்கு விசாரணை இந்த மாதம்28-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
டிட்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்பிக் நிறுவனத்தின் பங்குகளை மீண்டும் ஸ்பிக்நிறுவனங்களுக்கு கொடுத்ததால் அரசுக்கு
ரூ 28.29 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஜெயலலிதா மீது சென்னை தனிநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது
இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட முன்னாள் தொழில் துறைச்செயலாளர் ராமச்சந்திரன், தொழிலதிபர் ஏ.சி. முத்தையா மீதும் சி.பி.ஐ. வழக்குதொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு முதலாவது தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சென்ற ஆண்டுடிசம்பர் மாதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதன் பின் வழக்கு விசாரணைஒத்திவைக்கப்பட்டது.
புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போது சாட்சிகள் விசாரணைக்கு சென்னைஉயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் வழக்கு விசாரைணையை இந்த மாதம் 26-ம்தேதிக்கு ஒத்தி வைப்பதாக முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகபெருமாள்உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications