சுவாமியின் புராணம் ஆரம்பம் ..
மதுரை:
காலம் கடந்துவிட்டதால் தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமைவது சாத்தியமில்லை என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கருத்துவெளியிட்டார்.
மதுரையில் அளித்த பேட்டியில் சுவாமி, காங்கிரஸ் இதுவரை சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை.
இந்தியாவிலிருந்து புராதன கலைப் பொருட்கள், சால்வைகள், கோவில் சிலைகள், ஆகியவற்றை சோனியா காந்தியின் தாய் மற்றும் சகோதரிகள்கப்பல் மூலம் கடத்துகின்றனர்.
இத்தாலியில் உள்ள அவர்கள் கடையில் இவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.மேலும் அதிர்ச்சி தரக்கூடியது. இத்தாலிக்கு இவற்றை விமானம்மூலம் கடத்துபவர்கள் விடுதலைப் புலிகளின் கும்பலாகும்.
தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமைக்க காலம் கடந்து விட்டது. எனினும் மூன்றாவாது அணி அமைந்தால் அதில் ஜனதாக்கட்சி சேருவது பற்றிபரிசீலிக்கப்படும்.
இல்லையெனில் ஜனதாக்கட்சி தென் மாவட்டங்களில் 50 தொகுதிகளில் போட்டியிடும். ஜனதாக்கட்சியின் தொகுதி மாநாடு பிப்ரவரி 23 முதல் மார்ச் 1வரை நடைபெற இருக்கிறது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் விலைவாசி பிரச்சினையை ஏற்படுத்தும். வரும் தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது.
ஜெயலலிதா 20 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அவர் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்றும் சுவாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications