For Daily Alerts
Just In
மின்னல் வெட்டியது .. கீழே குதித்தனர் .. காயமடைந்தனர்
திருச்சூர்:
மின்னல் சத்தம் கேட்டவுடன், பூகம்பமோ என நினைத்துப் பயந்து, 12 போலீஸ்காரர்கள் மாடியிலிருந்து கீழேகுதித்துக் காயமடைந்தனர்.
கேரள மாநிலம் திருச்சூரில், உள்ள ராமவர்மாபுரம் பகுதியில் ஆயுதப் படை போலீஸாருக்கான முகாம் உள்ளது.இங்கு வியாழக்கிழமை இரவு மழை வருவது போல இருந்தது. இதையடுத்து மின்னலும் வெட்டியது.
மின்னல் சப்தம் கேட்டு குடியிருப்பில் இருந்த 12 போலீஸ்காரர்கள் பயந்து போய் முதல் மாடியிலிருந்து கீழேகுதித்தனர். இதில் அவர்களுக்கு கால் முறிவு, கை முறிவு ஏற்பட்டது.
காயமடைந்த அனைவரும் திருச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.
Story first published: Friday, February 2, 2001, 5:30 [IST]