இமயமலைக்கு ஆபத்து?

Subscribe to Oneindia Tamil

இந்தூர்:

இமயமலையில் 8 ரிக்டர் அளவில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளது என்று அமெரிக்க பூமியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இமயமலையில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட்டால் அது நேபாளத்தில் காட்மாண்டுவிலிருந்து இந்தியாவில் டெராடூன் வரை பாதிப்பைஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து நர்மதா பள்ளத்தாக்குப் பகுதியில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வரும் பூமியியல் ஆராய்ச்சி நிபுனர் ராம்ஸ்ரீவத்சவா கூறுகையில், இமயமலையில்பூகம்பம் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன என்று கொலராடோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் டாக்டர் ரோஜர் பில்ஹாம்கண்டுபிடித்துள்ளார். இதேபோல, இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, லக்னோ, பாட்னா ஆகிய நகரங்களிலும் பூகம்ப அபாயம் இருக்கிறது.

இமயமலையின் மலைத் தொடர்களை இணைக்கும் பகுதிகளில் அழுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளதால் அது வெடித்து பூகம்பம் ஏற்படுவதற்கானசாத்தியக் கூறுகள் உள்ளன. ஆனால் எப்போது பூகம்பம் ஏற்படும் என்று திட்டவட்டமாகக் கூறவில்லை.

இதனால் இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். பெரியகட்டிடங்கள், வீடுகள் ஆகியவற்றை பூகம்பத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் பழுதுபார்க்கவோ, இடித்து விட்டுக் கட்டவோ செய்ய வேண்டும் என்றுகூறியுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+