தேர்தல் சீட் .. இன்டர்வியூ செய்கிறார் ஜெ
சென்னை:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பிக்கும்அ.தி.மு.க.வினர் அனைவரையும் ஜெயலலிதா இன்டர்வியூ செய்யவிருக்கிறார்.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.சார்பில் தேர்தலில் சீட் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் ரூ10,000 கட்டியும்,பாண்டிச்சேரியில் சீட் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் ரூ 7,000 கட்டியும்விண்ணப்பங்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்ற திங்கள்கிழமை விண்ணப்பப்படிவங்கள் விற்பனை துவங்கியது. முதல்நாள்ஜெயலலிதா பேரில் ஏராள மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால் தொடர்ந்து வந்த இரண்டு நாட்களில் விண்ணப்ப விறப்னை மந்தமாகஇருந்தது.
புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் குணசேகர் சார்பில் அறந்தாங்கி, ஆண்டிப்பட்டி,திருமயம், புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட 100-க்கும்மேற்பட்டவர்கள் மனுக்கள் சமர்ப்பித்தனர்.
இதுவரை ரூ 1 கோடியே 20 லட்சம் வரை வசூலாகியது. வசூல் ரூ 3 கோடியைதாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விண்ணப்ப விற்பனை சற்று மந்தமாகஇருப்பதால் எதிர்பார்த்த அளவு பணம் வசூலாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தேர்தலில் சீட் கேட்டு பணம் கட்டிய எல்லோரையும் ஜெயலலிதா நேரில்இன்டர்வியூ செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால் முன்னாள் அமைச்சர்கள்,எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளிட்ட பலரும் சீட் கேட்டு பணம் கட்ட முன்வருவார்கள் என அ.தி.மு.க,. தரப்பில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications