ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

ஜம்மு:

ஜம்மு மற்றும் உத்தம்பூரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீநகருக்கு 4 பேர் கொண்ட குழுவை பிரதமர்அனுப்பியுள்ளார்.

மத்திய உரத்துறை இணை அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ஸா, மத்திய இணை அமைச்சர் சமன்லால் குப்தா, சிறுபான்மையினர் கமிஷன் உறுப்பினர் தர்லோசன் சிங்மற்றும் மூத்த பா.ஜ.க தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோரை சம்பவம் பற்றி விசாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுமாறுபிரதமர் அனுப்பி வைத்துள்ளார்.

சனிக்கிழமையன்று கொல்லப்பட்ட 6 சீக்கியர்களின் உடல்கள் ஞாயிறன்று தகனம் செய்யப்பட்டன. இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள்கலந்து கொண்டனர். இக்கட்டான சூழ்நிலையில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய நிலையில் போலீசார் உள்ளனர். இதற்காகத்தான் காலவரையற்றஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சீக்கிய மக்கள் குறி வைத்து தாக்கப்படுவதாக சீக்கிய மதத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 35 சீக்கியர்கள் காஷ்மீரின்தென்பகுதியில் உள்ள செட்டிசிங்கபூரில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் இப்பகுதியிலிருந்து வெளியேற தாங்கள் விரும்புவதாக சம்பவம் நடைபெற்ற மேஜோர் நகரைச் சேர்ந்தராஜேந்திர சிங் கூறினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+