ஜனாதிபதி ஆட்சி வருமா?
அகமதாபாத்:
குஜராத்தில் உடனடியாக முதல்வர் கேசு பாய்படேல் அரசை நீக்கி விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, ஜனாதிபதிகே.ஆர்.நாராயணனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
காந்தி நகரில் திங்கள்கிழமை குஜராத் மாநில முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித் தலைவருமான (காங்.) அமர்சிங் சவுத்ரி நிருபர்களிடம் கூறுகையில், குஜராத்தில்பூகம்பம் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தாலும் பல கிராமங்களில் மக்கள்நிவாரணப் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக முதல்வர் கேசுபாய்படேலின் ஆட்சியைக் கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
பூகம்பம் ஏற்பட்டு 3 நாட்களாகியும் முதல்வர் கேசுபாய்படேலுக்கு குஜராத் மாநிலத்தில் எத்தனை கிராமங்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டனஎன்பது தெரியாமல் இருந்தார். பூகம்பம் ஏற்பட்டு 11 நாட்களாகி விட்டன. இருப்பினும் இதுவரை ஏற்பட்ட பொருட்சேதத்தின் அளவை கணிக்க மாநிலஅரசு தவறி விட்டது.
சர்வதேச சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் நிதியுதவி மற்றும் நிவாரண உதவி சந்தோஷப்பட வைக்கிறது. ஆனால்அவை குஜராத் மாநில அரசு முறையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.