For Daily Alerts
Just In
பா.ம.க விலகல் .. த.மா.கா.அவசர ஆலோசனை
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய பா.ம.க, அ.தி.மு.க வுக்கு வரலாம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கருதுவதால் அக்கட்சியின் முக்கியநிர்வாகிகள் திங்கள்கிழமை இரவு சத்யமூர்த்தி பவனில் கூடி அவசரமாக ஆலோசனை நடத்தினர்.
மேலும் த.மா.கா நிர்வாகிகள் கூட்டம் அவசரமாக செவ்வாய்க்கிழமை நடக்கிறது. இதற்காக அமெரிக்கா சென்றுள்ள ப. சிதம்பரம்செவ்வாய்க்கிழமை சென்னை திரும்பி இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
ஒருபக்கம் தங்களுடன் பேச்சுவார்த்தையைத் துவக்கிவிட்டு, மறுபக்கம் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்க்க ஜெயலலிதா முயற்சி செய்வாரோ என்றசந்தேகம் த.மா.கா வுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தங்களது நிலை குறித்து த.மா.கா செவ்வாய்க்கிழமை முக்கிய முடிவு எடுக்கிறது.
Comments
Story first published: Tuesday, February 6, 2001, 5:30 [IST]