பூகம்பத்தால் பலன்?
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இருக்கும் காஷ்மீர்பிரச்சனைக்கு விரைவில் சுமூகமான தீர்வு ஏற்படும் என்று கிரேக்க நாடு தெரிவித்துள்ளது.
டெல்லியில் கிரேக்க நாட்டுப் பிரதமர் கோன்ஸ்டான்ஷியஸ் சிமிட்டிஸ் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமைகூறுகையில், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக இருந்து வரும் பிரச்சனையை தீர்த்துவைக்க பூகம்பம் பெரிய அளவில் உதவி புரியும் எனலாம்.
ஜம்மு - காஷ்மீரில் நிபந்தனையற்ற சண்டை நிறுத்தத்தை பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளார். காஷ்மீர்பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டுமானால் சில சமரசம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும்.
சில விஷயங்களில் இரண்டு நாடுகளுக்கிடையே பிரச்சனை இருந்தால், அதை சர்வதேச நீதிமன்றம் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. அதனால் இந்தியா, காஷ்மீர்நாடுகளுக்கிடையேயுள்ள பிரச்சனையைத் தீர்க்க சர்வதேச நீதிமன்றத்தை அணுகலாம் என்றார் சிமிட்டிஸ்.
முன்னதாக சிமிட்டிஸ், பிரதமர் வாஜ்பாய் மற்றும் பல தலைவர்களைச் சந்தித்து உள்நாடு மற்றும் சர்வதேசபிரச்சனைகள் குறித்துப் பேசினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications