பா.ம.க. எம்.பி. தேர்வை எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னை:
வேலூர் தொகுதியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியின் என்.டி.சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவை சென்னைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
என்.டி.சண்முகம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அ.தி.மு.க முன்னாள் மந்திரி முகம்மது ஆசிப் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதிபி.சதாசிவம்.
தேர்தலில் தில்லுமுல்லு செய்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறியதாக கூறி ஆசிப் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கூறியதாவது
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 83ன் படிகுற்றச்சாட்டுகள் பொதுவானவையாக இல்லாமல் குறிப்பிட்ட நடவடிக்கைகள் மக்கள் பிரதிநிதித்துவசட்டத்தை மீறியது பற்றி தெளிவாக கூறப்பட்டு அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
இவ்வழக்கில் சாட்டப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரங்கள் அளிக்கப்படாததால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் இவ்வழக்கை விசாரிக்க இயலாதுஎன்று குற்றம் சாட்டப்பட்டவர் தெரிவித்ததற்கேற்ப இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications