வருமானத்துக்கு அதிகமாக சொத்து .. ஜெ. புதிய மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதாமனு தாக்கல் செய்துள்ளார்.

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா,இளவரசி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் 1,053 பேர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தனர். வழக்கை விரைவாக முடிப்பதற்காக258 சாட்சிகளை மட்டுமே விசாரிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன் படி 100 சாட்சிகளும் விசாரித்துமுடிக்கப்பட்டுள்ளனர்.

100 சாட்சிகளை ஜெயலலிதாவின் வக்கீல் விருத்தாசல செட்டியார் விசாரித்தார். மீதமிருக்கும் 158 சாட்சிதளில் 70பேரை குறுக்கு விசாரணை செய்ய நீதிபதி ஆறுமுக பெருமாள் அனுமதி அளித்திருந்தார். இவர்களில் 50 பேரைஜெயலலிதா சார்பில் ஆஜராகும் மற்றொரு வக்கீல் ஜோதி குறுக்கு விசாரணை செய்தார்.

இந்நிலையில் ச ரி ஜெயலலிதா சார்பில் திங்கள்கிழமை ஒரு மனு புதிகாக தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, செவ்வாய்க்கிழமை ஒரு மனு தாக்கல் செய்யவிருக்கிறோம். அதில்முன்னரே சாட்சி அளித்தவர்களை மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரவிருக்கிறோம்.

அந்த மனு மீதான விசாரணையை இந்த மாதம் 9-ம் தேதி வைத்துக் கொளளுமாறும், பத்திரப்பதிவு அதிகாரி கேசவராமானுஜத்திடம் 7-ம் தேதி குறுக்கு விசாரணை செய்யவும், கோவை கோபால் ராவை 8-ம் தேதி குறுக்கு விசாரணைசெய்ய அனுமதி கேட்கிவிருக்கிறோம் என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+