இந்தியா-போலந்து ராணுவ ஒப்பந்தம்
டெல்லி:
இந்தியா- போலந்து இடையேயான ராணுவ விமானம் தயாரிக்கும் ஒப்பந்தம் ஒன்று பெங்களூரில் கையெழுத்தாக உள்ளது.
பெங்களூர் விமான சாகச நிகழ்ச்சியல் வைக்கப்பட்டுள்ள 19 பேர் அமர்ந்து செல்லும் வகையிலான ஸ்கை ட்ரக் விமானம் கடலோர காவல் பணியிலும்கமாண்டோ நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தக்கூடியது.
பிரைஸா எனப் பெயரிடப்பட்டுள்ள இவ்விமானம் நேட்டோ படைகள் போரின் போது பயன்படுத்தியதாகும். 5 முதல் 6 மணி நேரம் தொடர்ந்துபறக்கக்கூடிய இவ்வகை விமானங்களை தயாரிக்க போலந்து நிறுவனம் ஒன்றுடன் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் ஒப்பந்தம் செய்யவுள்ளது.
பெங்களூர் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த போலந்தின் பாதுகாப்புத்துறை துணை மந்திரி ரொமுவால்ட் ஸெரிமிடியூ, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார்.
ராணுவ பயிற்சி மற்றும் சிவில் விமானங்கள், மற்றும் பல ராணுவ உபகரணங்கள் வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வதில் இந்தியாவிற்குஉதவுவதோடு அல்லாமல் இரு நாடுகளும் சேர்ந்து பணியாற்றக்கூடிய பல்வேறு துறைகள் பற்றி இரு நாடுகளும் ஆராயும் என்றும் தெரிவித்தார்.
யு.என்.ஐ.