For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏழைகளுக்கு கிலோ 3 ரூபாய்க்கு அரிசி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பிரதமரின் பரம ஏழைகளுக்கான அரிசித் திட்டத்தால் தமிழகத்தில் 7.5 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று மத்திய உணவு அமைச்சர் சாந்தகுமார்தெரிவித்தார்.

சாந்தகுமாரின் தலைமையில் சென்னையில், நடைபெற்ற தென்மாநில உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமரின் (அந்த்யோதயா அன்ன யோஜனா)பரம ஏழைகளுக்கான அரிசித் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

நாட்டில் உள்ள மக்களில் 5 சதவீதம் பேர் பரம ஏழைகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மாத வருமானம் ரூபாய் 660க்கு கீழே உள்ளவர்கள் பரமஏழைகள் என மத்திய திட்டக்குழு நிர்ணயித்துள்ளது.

வரும் ஏப்ரல் முதல் செயல்படவுள்ள இத்திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முதியோர்களை இத்திட்டத்தில் சேர்க்க தமிழகமுதல்வர் கோரினார்.

இத்திட்டத்தின் கீழ் கிலோ ஒன்று மூன்று ரூபாய் என 25 கிலோ அரிசி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கோதுமையின் விலை இரண்டு ரூபாய்என்றார் அமைச்சர் சாந்தகுமார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X