For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாய்லாந்தில் மனைவிகள் அதிகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

பாங்காக்:

தாய்லாந்து ஆண்களில் கால்வாசிப்பேர் பல மனைவிகளை உடையவர்களாக இருப்பதாக தாய்லாந்து டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

1932-லேயே தாய்லாந்து அரசாங்கம் பலதார மணங்களை தடைசெய்து விட்டாலும் தற்போதும் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் பல தாரங்களைஉடையவர்களாகவே இருக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் 30 வயது முதல் 50 வயது வரையான தொழிலதிபர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் மேற்பட்டமனைவியரைக் கொண்டுள்ளனர். முதல் மனைவி தவிர பிற மனைவியர், பெரும்பாலும் 20 வயது கல்லூரி மாணவிகள் முதல் 30 வயது வரை உள்ளபெண்களாவர்.

தாய்லாந்தில் காலங்காலமாக நிலவி வரும் இவ்விஷயத்தில் ஆண்கள் எத்தனை பெண்களை வைத்திருந்தாலும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கின்றனர். நீண்ட நாள் காதலிகளுக்கு சொந்த வீடு கூட கிடைக்கிறது.

இத்தகவல்களை தெரிவித்தவர் பாங்காக் நகர ரமாதிபோடி மருத்துவமனையின் மனநலத்துறை டாக்டரான நோங்பங்கா லிம்ஸுவான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X