ஏன் கூட்டணியிலிருந்து விலகியது பா.ம.க?
டெல்லி:
கூட்டணியை விட்டு விலகும் முடிவுக்கு வந்து, தங்கள் கட்சி அமைச்சர்கள் ராஜினாமாவையும் கொடுத்து விட்ட பா.ம.க, கூட்டணியிலிருந்து ஏன் திடீரென்றுவிலகியது என்பது குறித்து செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு விவகாரம் தற்போது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. அதிமுக வுடன் உடன்பாடு வைத்துக்கொள்ளும் நிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் வந்துவிட்டது. தொகுதி பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தைகளும் துவங்கி விட்டன. இந்த நிலையில் பாட்டாளிமக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள கடைசி வாய்ப்பளிப்பதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியே வந்தால் அதிமுக வில் இடம் கிடைக்கும் என்று கருதி பாமக அக்கூட்டணியை விட்டுஅதிரடியாக திங்கள்கிழமை விலகி விட்டது என்று கருதப்படுகிறது.
கூட்டணியிலிருந்து விலகுவதற்கான காரணத்தை ராமதாஸ் உடனடியாகத் தெரிவிக்கவில்லை. பதவி விலகிய பாமக அமைச்சர்கள் டெல்லியில் கூறியபோது, சென்னையில் ராமதாஸ், இதுகுறித்து விளக்குவார் என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications