த.மா.கா வை இழுக்க பழனிவேல் ராஜன் முயற்சி
மதுரை:
தமிழ் மாநில காங்கிரசை மீண்டும் தி.மு.க. கூட்டணியில் சேர்க்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கானமுயற்சியில் தமிழக சட்டசபை சபாநாயகர் பழனிவேல் ராஜன் ஈடுபட்டுள்ளார்.
தமிழக அரசியலில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தி.மு.க. அணியில் இருந்து வந்த பாட்டாளி மக்கள்கட்சி அந்த அணியிலிருந்து விலகியுள்ளது.
அது அ.தி.மு.க. அணியில் இணையும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதன் காரணமாக த.மா.கா. கேட்கும்அளவுக்கு சீட் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதனால் த.மா.கா. தனிமைப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தி.மு.க. முடிவெடுத்துள்ளது. த.மா.கா. வை மீண்டும் தி.மு.க. கூட்டணியில் இணைக்கும் முயற்சியும்நடைபெற்று வருகிறது.
த.மா.கா. தலைவர் மூப்பனார் பல முறை தி.மு.க.வை தாக்கி பேசிய போதும் அதற்கு பதில் கூறாமல் மெளனமாகஇருந்து வந்தார் கருணாநிதி. த.மா.கா.வுடன் மீண்டும் உறவு ஏற்படுத்துவதற்கான முயற்சியை பழனிவேல்ராஜனிடம் கட்சி தலைமை கொடுத்திருப்பதாக தெரிகிறது. இதை பழனிவேல் ராஜனே ஒப்புக் கொண்டுள்ளார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், மூப்பனார் அ.தி.மு.க. அணியில் சேர்ந்துதேர்தலில் போட்டியிட போவதாக கூறப்படுவது தவறு. மூப்பனார் இதுவரை எந்தவிதமான முடிவும்எடுக்கவில்லை.
த.மா.கா. மீண்டும் தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும் என நான் விரும்புகிறேன். இதற்கான முயற்சியிலும்நான் ஈடுபட்டுள்ளேன். என் முயற்சி பலிக்கும் என நம்புகிறேன். தேர்தலில் தி.மு.க., த.மா.கா., கூட்டணி இணைந்துபோட்டியிடும் என நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications