இறக்குமதிக்கு 100 சத வரி .. தேயிலை அதிபர்கள்
சென்னை:
இறக்குமதி தேயிலைக்கு 100% வரி விதிக்க தென்னிந்திய தேயிலைத் தோட்ட அதிபர்கள் சங்கத்தின் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பவள விழாகருத்தரங்கில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னையில், நடந்த 2 நாள் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறன், இறக்குமதி வரி விதிப்பதில் சிலசிக்கல்கள் இருக்கின்றன. எனினும் வருகிற பட்ஜெட்டில் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும் என்றார்.
தேயிலை ஏற்றுமதியில் முதல் 5 நாடுகளுள் ஒன்றான இந்தியாவில் அதன் உற்பத்தியில் 80% உள்நாட்டு தேவைக்கு பயன்படுகிறது. கடந்த ஆண்டுடன்ஒப்பிடும்போது தேயிலை ஏற்றுமதி குறைந்துள்ளது.
தேயிலை, காபி மற்றும் இவை சாரந்த பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க மத்திய அரசின் முயற்சிக்கு உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஒத்துழைப்புஅளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கருத்தரங்கில் மாஸ்டர் மதன் எம்.பி., வர்த்தகத்துறை கூடுதல் செயலர் சப்தரிஷி, தேயிலை வாரிய மண்டல தலைமை நிர்வாகி உள்பட பலர் பேசினர்.












Click it and Unblock the Notifications