For Quick Alerts
For Daily Alerts
Just In
அதிமுகவைத் தோற்கடிப்போம் ..வைகோ
திருச்சி:
தங்களின் கூட்டணி ஊழலை தண்டிக்கும் கூட்டணி என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
திருச்சியில் நிருபர்களிடம் தேர்தல் பற்றி பேசிய போது,
தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். தமிழகத்தின் 234 தொகுதிகளில் கட்சிகளின் நிலைகுறித்து ஆராயப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கட்சிக்கொரு நிலைப்பாடு இருந்தாலும் வருகிற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியைதோற்கடிக்கும்.
தி.மு.க.கூட்டணி ஊழலை தண்டிக்கும் கூட்டணி அதில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க. வின் நிலை தெளிவானது.
தி.மு.க.வின் வெற்றிக்கு கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளே காரணமாக அமையும்.
தேச ஒற்றுமை மற்றும் இந்தியாவை வல்லரசாக்கும் வாஜ்பாய் அரசின் முயற்சிக்கும் ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Comments
Story first published: Tuesday, February 6, 2001, 5:30 [IST]