அமிர்தராஜ் நிதிவசூல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் தனது இன்டர்நெட் தளத்தின் மூலம் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி வசூல்செய்கிறார்.
விஜய் அமிர்தராஜ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் சேர்ந்து இந்த நிதி வசூலில் ஈடுபட்டுள்ளார். இந்தப் பணத்தை உடனுக்குடன் இந்தியாவில் அவர் பூகம்பநிவாரண நிதிக்கு செலுத்தி விடுகிறார்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதியுதவி அளிக்க வேண்டும். மிகவும் ஏழை மக்கள் பூகம்பத்தால் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டு விட்டார்கள். இப்போது நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வதுதான்என்று கூறியுள்ளார் விஜய் அமிர்தராஜ்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications