அதிமுக கூட்டணி: ஆலோசனை நடத்துகிறது காங்கிரஸ்
டெல்லி:
தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ம.க. இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதால் எந்த விதமானசெயல் திட்டத்தில ஈடுபடுவது என்பது குறித்து தமிழக, பாண்டிச்சேரி காங்கிரஸ்கட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவுசெய்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் டெல்லியில்செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலில் தமிழக,பாண்டிச்சேரி காங்கிரஸ்கட்சியினரிடம் பேசசு வார்த்தை நடத்துவோம். அதன் மூத்த காங்கிரஸ்தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவோம். பின்னர் மாநில எம்.பிக்களுடன்பேசுவோம்.
பா.ம.க. வுடனான கூட்டணி குறித்து முடிவு செய்யும் முன் ஜெயலலிதா கலந்துஆலோசிக்கவில்லை. பா.ம.க. அ.தி.மு.க.வில் இணைந்தது எந்த விதமானஅதிர்ச்சியையும் கொடுக்கவில்லை.
அரசியலில் எதுவுமே அதிர்ச்சி கிடையாது.அரசியல்வாதிகள் எந்த அதிர்ச்சியையும்தாங்கக் கூடியவர்கள் என கூறினார்.
யு.என்.ஐ.