"வீரப்பனிடம் கருணாநிதியின் ரகசிய போன் நம்பர்
சென்னை:
அதிரடிப்படை தாக்குதலின் போது வீரப்பன் கும்பல் விட்டுச் சென்ற டிஜிட்டல் டயரியில் கருணாநிதியின் ரகசிய டெலிபோன் நம்பர் இருந்ததாக ஜெயலலிதாதெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், வாலையாறு வனப்பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் அதிரடிப்படை-வீரப்பன் கும்பல் மோதலின் போது வீரப்பன் கும்பல் விட்டுச்சென்ற டிஜிட்டல் டயரியை கேரள போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் கருணாநிதி மற்றும் பல தலைவர்களின் ரகசிய தொலைபேசி எண்கள் இடம் பெற்றிருந்ததால் அதனை கேரள போலீசார் முதல் தகவல்அறிக்கையில் சேர்க்க விடாமல் தமிழக போலீஸார் எடுத்து வந்துள்ளனர்.
அதிரடிப்படை தாக்குதல் ஒரு நாடகம். கருணாநிதி, வீரப்பனை காப்பாற்றி வருவதால் தான் டிஜிட்டல் டயரி பற்றிய தகவலை மறைத்துள்ளார்.
தமிழக போலீசார் இவ்விஷயத்தில் கடமை உணர்வோடு செயல்பட்டு உண்மைநிலை என்ன என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
இதனிடையே, கேரள போலீசார் வீரப்பன் கும்பல் விட்டுச் சென்ற பொருட்களில் டிஜிட்டல் டைரி எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications