பட்ஜெட்: வெட்டு வருமா?
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
குஜராத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் ராணுவ பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்படாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்னான்டஸ் பெங்களூரில் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நாட்டில் எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் அது நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தபின்விளைவையும் ஏற்படுத்தாது. குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் ராணுவ பட்ஜெட்டில் எந்த பின் விளைவையும் ஏற்படுத்தாது.
நாங்கள் கேட்கும் பட்ஜெட்டை நிதியமைச்சர் தருவார் என்று நம்புகிறோம். குஜராத் நிவாரண நிதிக்காக ஏற்கனவே மத்திய அரசு 2 சதவீதம் கூடுதல்வரி வசூல் செய்வதாக அறிவித்துள்ளது என்றார் ஜார்ஜ் பெர்னான்டஸ்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications