3 உயிர்களைப் பறித்தது "முன்னாள் கார்கில் குண்டு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
கார்கில் போரின் போது பாகிஸ்தான் பயன்படுத்திய வெடிக்காத குண்டு ஒன்று செவ்வாய்க்கிழமை வெடித்ததில் கார்கில் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர்பலியாகினர்.
கார்கில் மாவட்டம், துமுக் பாஷ்கும் கிராமத்தின் இப்ராஹிம், அவருடைய மகன் பக்கீர், மகள் ஹவா மூவரும் அருகில் உள்ள மலைப் பகுதியிலிருந்துஎடுத்த வந்த ஒரு பொருளை பயன்படுத்திய போது அது வெடித்தது.
இதில் அவர்கள் மூவரும் இறந்தனர். இது 1999 கார்கில் போரின் போது பாகிஸ்தான் பயன்படுத்திய குண்டாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் 35வீடுகள் எரிந்து நாசமாயின. லஸ்கர்-இ-தோய்பா அமைப்பைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர், ஒருதீவிரவாதி கொல்லப்பட்டார்.
இத்தகவல்களை அரசின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications