கண்ணனை அழைக்கிறார் கலைஞர்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியின் முன்னாள் அமைச்சர் கண்ணனும், அவரது பாண்டிச்சேரி மக்கள்காங்கிரஸ் கட்சியினரும் வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துபோட்டியிடலாம் என தமிழக முதல்வரும்.தி.மு.க. தலைவருமான கருணாநிதிதெரிவித்துள்ளார்.
தமிழ் நாளிதழ் ஒன்றின் பாண்டிச்சேரி பதிப்பை துவக்கி வைத்து பேசுகையில் அவர்கூறியதாவது:
முன்பு கண்ணன் கூறியபோது, கலைஞரை விட்டு விலகியவரெல்லாம் இப்போதுஅவருக்கு பின்னால் இருக்கிறார்கள். கலைஞரை நான் தந்தை போல் மதிக்கிறேன். நான்செய்த தவறுக்களாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அவரை விட்டு விலகியவர்கள் இப்போது அவருடன் இருக்கிறார்கள் என்று கூறியது,அவர் தி.மு.க.கூட்டணியில் இணைவார் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
தற்போது செய்தித்தாள்களின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். அதற்குகாரணம், சில நாளிதழ்களின் தவறான போக்குதான். பத்திரிக்கை உரிமையாளர்கள்இந்த எண்ணத்தைக் களைய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
செய்தித்தாள்கள் உண்மையான செய்திகளை வெளியிட வேண்டும். கட்சி சார்புஇல்லாமல் நடுநிலையான செய்திகளை வெளியிட வேண்டும். விமர்சனங்களும் சமஅளவில் இருக்க வேண்டும். ஒரு தலைபட்சமாக இருக்க கூடாது என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications