80 குழந்தைகள் தத்தெடுப்பு
கரூர்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 30 குழந்தைகளைத் தத்தெடுக்க கரூர் ராமகிருஷ்ணா ஆசிரமம் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரமத் தலைவர் ஆத்மானந்தா கூறுகையில், குஜராத் பூகம்பத்தில் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெற்றோரையும்,எதிர்காலத்தையும் தொலைத்து விட்டு நிற்கிறார்கள். பாதிக்கப்பட்ட 30 குழந்தைகளை நாங்கள் தத்தெடுக்க முடிவு செய்துள்ளோம்.
இதற்காக குஜராத்தி மொழி தெரிந்த ஆண் அல்லது பெண் இருவர் உடன் வந்தால் குழந்தைகளைப் பராமரிக்க உதவியாக இருக்கும் என்றார் அவர்.
ஹரியானாவில் 50 குழந்தைகள்:
இதேபோல 50 குழந்தைகளைத தத்தெடுக்க உள்ளதாக ஹரியானா அறிவித்துள்ளது.
ஹரியானா சட்டசபை சபாநாயகர் சத்பீர் சிங் காடியன், குஜராத் கவர்னர் சுந்தர் சிங் பண்டாரி மற்றும் குஜராத் சட்டசபை சபாநாயகர் தீருபாய் ஷா விடம்கூறுகையில், ஹரியானா, குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 50 குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்ளும்.
அவர்களுக்கான கல்வி மற்றும் அனைத்து வசதிகளையும் ஹரியானா அரசு செய்து கொடுக்கும் என்றார். ஹரியானாவிலிருந்து குஜராத் வந்துள்ளமீட்புக்குழுவினர், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications