கென்யா "ஆல் அவுட் .. கிரிக்கெட்டில் அல்ல
நைரோபி:
கென்ய அணி கூண்டோடு நீக்கப்பட்டு இந்தியப் பயணமும் ரத்து செய்யப்பட்டது.
மூன்று ஆண்டுகளாக அணி வீரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படவில்லை. எனவே, சம்பள உயர்வு மற்றும் பல வசதிகள் கேட்டு அணியின் வீரர்கள்கடந்த வாரம் கென்ய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் அளித்திருந்தனர்.
வீரர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் ஸ்டிரைக் நடத்தப்படும் என்றும் ஒரு வீரர் எச்சரித்திருந்தார்.
இது குறித்து விவாதித்த கென்ய கிரிக்கெட் வாரியம், அணித்தலைவர் உள்பட 11 வீரர்களை நீக்கியதோடு மட்டுமல்லாது அடுத்த இரு மாதங்கள்இந்தியா மற்றும் பங்களாதேஷில் கென்ய அணி கலந்து கொள்ளவிருந்த போட்டிகளையும் ரத்து செய்து விட்டது.
அணியில் மிஞ்சியவர்கள் ஸ்டீவ் டிக்காலோவும், ஹிதேஷ் மோதியும் தான்.
வீழ்ந்த "விக்கெட்டுகள்:
மோரீஸ் ஒடும்பே(கேப்டன்) ,
துவக்க ஆட்டக்காரர் ரவீந்து ஷா, மற்றும் கென்னடி ஒடினோ,
ஆல் ரவுண்டர் தாமஸ் ஒடாயோ,
வேகப்பந்து வீச்சாளர்கள் மார்டின் மற்றும் டோனி சுஜி ஆகியோருடன்
ஜிம்மி கமாண்டே, பிரஜால் படேல், பிரான்ஸிஸ் ஒடினோ, பீட்டர் ஓசிங்.
இவர்களின் காண்ட்ராக்ட் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் வாரியம் அறிவித்துவிட்டது.